உனக்கும் எனக்குமான தொலைவுகள்
வளர்ந்து கொண்டே சென்றாலும் நினைவுகளால்
உன்னை துரத்தி நெருங்க முயற்சிக்கிறேன்....நினைவுகளுக்கு
காலமும் தூரமும் நேரமும் கிடையாதென்பது உண்மை.
உனக்கும் எனக்குமான தொலைவுகள்
வளர்ந்து கொண்டே சென்றாலும் நினைவுகளால்
உன்னை துரத்தி நெருங்க முயற்சிக்கிறேன்....நினைவுகளுக்கு
காலமும் தூரமும் நேரமும் கிடையாதென்பது உண்மை.
சாளரத்தின் ஊடே சட்டென வழியும்
மழைதண்ணீர் போல் , எல்லா நினைவுகளும்
வடிந்து முடிந்துவிட்ட நிலையில் புத்தனாக
அலுவலகம் செல்கிறேன் -அவள் இறங்கும் நிறுத்தத்தில்
நின்று புகைக்கிறேன் -இன்றாவது வருவாளா ,சிரிப்பாளா ?
புத்தன் மனிதன் ஆனான் .
என்னை கடக்கையில் நின்றால் ,சிரித்தால் ,நடந்தால் -இது
அது தான் என குதித்தது குரங்கு மனது .
காலில் மெட்டி ,நடு வகிட்டில் பொட்டு ,புது தாலி .
விடுப்பின் காரணம் புரிந்ததில் புகை அணைத்து
அலுவலகம் செல்கிறேன் -மீண்டும் புத்தனாக .
ஆம் ,புத்தனும் மணம் செய்து தானே ஆசை துறந்தான் .