Monday, June 29, 2009

தேடல்....

சொந்தங்களின் நசநசப்பில் இருந்து விடை பெற்று
முதலிரவு அறைக்குள் நீ நுழைந்து
என் கண் நோக்கி ஏதோ தேடினாய் - என்னவென்று கேட்டதில்
ஒண்ணுமில்லை என்று சினுங்கிகொண்டாய்.....

எல்லாம் முடிந்து விலகி படுத்து தேடியது
என்னவாக இருக்கும் என்று நான் யோசிக்கையில்
"உண்மை" என்று பதிலளித்தது உள்மனது.....
உண்மையாகவே அதைத்தான் தேடினாளா/தேடினானா?....

எல்லா இரவுகளிலும் சில உண்மைகளின்
தேடல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
விடைகள் தான் கிடைப்பதில்லை.....

Wednesday, June 24, 2009

விதி

கரை தொட்ட அலையின்
ஈர மணலில் உன் பாதசுவடின்
மீது நடக்க பிடிக்கும் - குளிர்ந்த இரவில்
யாருமற்ற தனிமையில் உன்
கைகோர்த்து நடக்க பிடிக்கும் - உன்
மடி மீது குலுங்கி அழுது என்
துக்கம் பகிர பிடிக்கும் -
உன்முகம் பார்த்து கணக்கற்ற கதை
பேச பிடிக்கும் - உன்னோடு
நீ கொண்டு வரும் Pond's பவுடர்
வாசம் பிடிக்கும் - eyetex
கண்மையிட்டஉன் கண்கள் பிடிக்கும் - நீ சினுங்குவதற்கு
முன் சிணுங்கும் உன் ஜிமிக்கி தோடு
பிடிக்கும் - இரவை போல்நீண்ட
உன் கூந்தல் பிடிக்கும் - அதில்
நீசூடும் மல்லி பிடிக்கும் - மொத்தத்தில்
உன் எல்லாமும் எனக்கு பிடிக்கும் - எல்லையற்றவளே,
உன் எல்லாமும் பிடித்த என்னை
எனக்கும் உனக்கும் பிடிக்காமல்
போனதில் அதிக ஆச்சரியமில்லை தான் - ஆம்
எதிர் எதிர் துருவங்கள் தான்
ஈர்ப்பு கொள்ளுமாம் - இது தான் இயற்கையின் விதி.

Monday, June 22, 2009

சுமை????

உன்னையோ உன் நினைவுகளையோ
என்றும் சுமையாக நினைத்ததில்லை- நீ
என்னை உதறிய பின்பும்.....

Sunday, June 21, 2009

தேவதைத்திருநாள்

என் தேவதைக்கு பிறந்தநாள் - இனிப்பு,
பூக்கள்,பரிசுகள் - இவை அனைத்தும்
எல்லாரும் உனக்கு கொடுக்க கூடும்
ஆனால் யாரும் தராத ஒன்றை உனக்கு
நான் பரிசாக தருகிறேன் - என் மனது.
ஆமாம், உன்னையே உனக்கு பரிசாக
தர என்னால் மட்டும் தானே முடியும்.
எனென்றால் என் மனது முழுக்க நீயல்லவா
இருக்கிறாய் - இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
குறிப்பு :
உனக்கு இன்று மட்டும் தான் திருநாள் - எனக்கு
உன்னை காணுகின்ற எல்லா நாளும் திருநாளே....

Wednesday, June 10, 2009

நண்பம்

நல்ல நண்பம் கூடி பிரிவதில் புரியும் -
இதயத்தின் ஒரு பகுதி கிழிந்து தொங்கும்
தொண்டைக்குழி அடைத்து நிற்கும் - கனவுக்கன்நீர்
கண்களில் திரையிடும் -உறக்கம்
வர மறுக்கும் - இது
போல் நல்ல நண்பம் இல்லை என கொள்ளும் .

பிரிதல் - காலத்தின் அவசியம்
புரிதல் - நட்பின் அவசியம்
உனக்கும் எனக்குமான புரிதல்
அவசியங்களை கடந்ததாக இருக்கட்டும் ...

கண்ட நாள் முதலாய் புன்னகை பூக்களை வீசியவளே
இனி அந்த பூங்கொத்துக்கள் எங்கிருந்து கிடைக்கும் ?
இது வரை நீ வீசிய பூக்கள் என் இதய
பெட்டகத்தில் பத்திரப்படுத்த பட்டுரிக்கின்றன ....
அவை யாருக்கும் விற்ப்பனைக்கு அல்ல ..

உன்னால் ஆயிரம் தழும்புகளை நான் பெற்றாலும்
என்னால் உனக்கு ஒரு தழும்பு இருக்கலாகாது - இருந்தால்
மருந்திட காத்திருக்கிறேன் தோழி ....

எல்லா நிலையிலும் துன்பம் தருவது காதல்
எல்லா துன்பதிளிம் துயர் துடைப்பது நட்பு ...
காதலை ஏற்க்க மறுத்தாலும் -
நட்பு சிலுவை சுமக்க விடு என்னை .....

வாழ்வில் உன் எல்லா இலக்குகளும் சுலபமாகட்டும்
உலகம் சுருங்கட்டும் - உன் வாழ்வில் எல்லா
நாளும் கார்த்திகை ஆகட்டும் .
உன் வெற்றி கைக்கு எட்டும் தூரத்தில் .....சாதித்து விடு சீக்கிரம் ...

உனக்கும் எனக்குமான புரிதலுடன் .....

Monday, June 8, 2009

மீண்டும் புத்தன்

சாளரத்தின் ஊடே சட்டென வழியும்

மழைதண்ணீர் போல் , எல்லா நினைவுகளும்

வடிந்து முடிந்துவிட்ட நிலையில் புத்தனாக

அலுவலகம் செல்கிறேன் -அவள் இறங்கும் நிறுத்தத்தில்

நின்று புகைக்கிறேன் -இன்றாவது வருவாளா ,சிரிப்பாளா ?

புத்தன் மனிதன் ஆனான் .

என்னை கடக்கையில் நின்றால் ,சிரித்தால் ,நடந்தால் -இது

அது தான் என குதித்தது குரங்கு மனது .

காலில் மெட்டி ,நடு வகிட்டில் பொட்டு ,புது தாலி .

விடுப்பின் காரணம் புரிந்ததில் புகை அணைத்து

அலுவலகம் செல்கிறேன் -மீண்டும் புத்தனாக .

ஆம் ,புத்தனும் மணம் செய்து தானே ஆசை துறந்தான் .

விதை நெல்

பால்யத்தின் நட்பையும் நினைவுகளையும் தொலைத்து விட்டு செல்லரித்த புகைப்படத்தில் முகம் மறைந்து போயிருக்கும் என்னுயிர் நண்பனின் முகம் தேடி கொண்டிருந்தேன் . சிணுங்கிய கைபேசியில் புது எண் -அவனாக இருக்குமோ ? யோசிக்கிறது பேதலித்த மனது –தொலைந்து போன விதை நெல்லை மறந்து …..

மரண முத்தம்

பதுங்கு குழியில் குண்டுகளின் சில்லுகள் தெறித்து
முகமெங்கும் ரத்தம் - மழை
நீரோடு செங்குருதி நீர் கலக்க
வழிந்தோடும் வழிஎல்லாம் ரத்தம் - காதை
செவிடாகி கைஎரிகளை தூவி எம்
குழந்தைகளை முடமாக்கும் இயந்திர
பறவையின் இறகுகளில் ரத்தம் - என்
காயத்ரியின் மையிட்ட இருகண்களில் ஒரு
கண்ணில் துளையிட்டு நிற்கும் ரவையில் ரத்தம் - என்
மடியில் தலை வைத்து துவக்கியை துணை வைத்து
உறங்கிய சிறீதரனின் காதோரம் வழிந்த ரத்தம் இதை
காணுகின்ற ஆமிகாரர்களின் மனதில்
வழியும் சுகத்தின் அடிநாதம் எம் ரத்தம் - இதை
எண்ணி உள்ளம் எரிந்து இடக்கையை மடக்கி
மணிக்கட்டை முத்தமிட்டேன் - குண்டு வெடித்தது.

கல்லறைக்காவலன் .

மரணித்த என் பிள்ளைகள்
பிறந்தளுத்த ஆத்மாக்கள் -
தொட முடியா உளுத்தர்கள்
தாங்க முடியா மனிதத்தின் இம்சையில்
விடுதலை பெற்று கொண்டவர்கள்

மௌனித்த இம்சையில் மௌன பாஷை
கூறி விடுப்பு எடுத்தவர்கள் - விழித்தவுடன் அழும்
குழந்தைகளை போல் மரணித்ததும் சிரித்தவர்கள் -
துறவறம் பூண்ட புத்தனின் மனைவி போல் சகலமும் துறந்தவர்கள்.

சஞ்சரித்த சந்தோஷித்த உலகத்திற்கு விடை கொடுத்தவர்கள்
மீளா உறக்கம் உறங்க என்னிடம் இடம் கேட்க்கும்
முடிவிளிகளின் கடைசி உறவினன் ,
கல்லறைக்காவலன் .

Monday, June 1, 2009

ஆசிர்வாத இம்சைகள்

வைரமுத்து இந்த மாதிரி நிறைய எழுதிட்டார் (பெய்யென பெய்யும் மழை ....)....அவர் எழுதாம விட்டதா நான் கொஞ்சம் ட்ரை பண்ணி பார்த்தேன் .....நல்லா இருந்தா கமெண்ட்ஸ் எழுதுங்கபா....... ப்ளீஸ்...

மார்கழி பனி ,
ஓலை குடிசை ,
தாழிட்ட கதவு ,
ஒற்றை படுக்கை ,
போர்வையாய் நீ ..
இது போதுமடி எனக்கு ......

இரவு பேருந்து ,
மெலிதான மழை ,
கண்ணாடி ஜன்னல் ,
கதகதப்பாய் நீ ,
கையணைப்பில் நான் ,
இது போதுமடி எனக்கு …….

பட்டாசு பண்டிகை ,
தலையில் மல்லிகை பூ ,
ரத்த நிற பட்டுபுடவையில் சிரிகிறாய் நீ ,
கிறக்கத்தில் நான் ,
இது போதுமடி எனக்கு ….

அலட்சிய செய்கை ,
ஆளை விழுங்கும் பார்வை ,
பேசத்துடிக்கும் உதடு ,
பார்த்து தவிர்க்கும் பார்வை
துடிக்கின்ற கண்கள் ,
தூரத்து நீ ,
அவஸ்தையில் நான் ,
ஒற்றை பார்வை போதுமடி எனக்கு ….

நெஜமா தான் சொல்றியா?????