Monday, June 1, 2009

ஆசிர்வாத இம்சைகள்

வைரமுத்து இந்த மாதிரி நிறைய எழுதிட்டார் (பெய்யென பெய்யும் மழை ....)....அவர் எழுதாம விட்டதா நான் கொஞ்சம் ட்ரை பண்ணி பார்த்தேன் .....நல்லா இருந்தா கமெண்ட்ஸ் எழுதுங்கபா....... ப்ளீஸ்...

மார்கழி பனி ,
ஓலை குடிசை ,
தாழிட்ட கதவு ,
ஒற்றை படுக்கை ,
போர்வையாய் நீ ..
இது போதுமடி எனக்கு ......

இரவு பேருந்து ,
மெலிதான மழை ,
கண்ணாடி ஜன்னல் ,
கதகதப்பாய் நீ ,
கையணைப்பில் நான் ,
இது போதுமடி எனக்கு …….

பட்டாசு பண்டிகை ,
தலையில் மல்லிகை பூ ,
ரத்த நிற பட்டுபுடவையில் சிரிகிறாய் நீ ,
கிறக்கத்தில் நான் ,
இது போதுமடி எனக்கு ….

அலட்சிய செய்கை ,
ஆளை விழுங்கும் பார்வை ,
பேசத்துடிக்கும் உதடு ,
பார்த்து தவிர்க்கும் பார்வை
துடிக்கின்ற கண்கள் ,
தூரத்து நீ ,
அவஸ்தையில் நான் ,
ஒற்றை பார்வை போதுமடி எனக்கு ….

நெஜமா தான் சொல்றியா?????

No comments:

Post a Comment