Wednesday, June 10, 2009

நண்பம்

நல்ல நண்பம் கூடி பிரிவதில் புரியும் -
இதயத்தின் ஒரு பகுதி கிழிந்து தொங்கும்
தொண்டைக்குழி அடைத்து நிற்கும் - கனவுக்கன்நீர்
கண்களில் திரையிடும் -உறக்கம்
வர மறுக்கும் - இது
போல் நல்ல நண்பம் இல்லை என கொள்ளும் .

பிரிதல் - காலத்தின் அவசியம்
புரிதல் - நட்பின் அவசியம்
உனக்கும் எனக்குமான புரிதல்
அவசியங்களை கடந்ததாக இருக்கட்டும் ...

கண்ட நாள் முதலாய் புன்னகை பூக்களை வீசியவளே
இனி அந்த பூங்கொத்துக்கள் எங்கிருந்து கிடைக்கும் ?
இது வரை நீ வீசிய பூக்கள் என் இதய
பெட்டகத்தில் பத்திரப்படுத்த பட்டுரிக்கின்றன ....
அவை யாருக்கும் விற்ப்பனைக்கு அல்ல ..

உன்னால் ஆயிரம் தழும்புகளை நான் பெற்றாலும்
என்னால் உனக்கு ஒரு தழும்பு இருக்கலாகாது - இருந்தால்
மருந்திட காத்திருக்கிறேன் தோழி ....

எல்லா நிலையிலும் துன்பம் தருவது காதல்
எல்லா துன்பதிளிம் துயர் துடைப்பது நட்பு ...
காதலை ஏற்க்க மறுத்தாலும் -
நட்பு சிலுவை சுமக்க விடு என்னை .....

வாழ்வில் உன் எல்லா இலக்குகளும் சுலபமாகட்டும்
உலகம் சுருங்கட்டும் - உன் வாழ்வில் எல்லா
நாளும் கார்த்திகை ஆகட்டும் .
உன் வெற்றி கைக்கு எட்டும் தூரத்தில் .....சாதித்து விடு சீக்கிரம் ...

உனக்கும் எனக்குமான புரிதலுடன் .....

No comments:

Post a Comment