Monday, June 8, 2009

மீண்டும் புத்தன்

சாளரத்தின் ஊடே சட்டென வழியும்

மழைதண்ணீர் போல் , எல்லா நினைவுகளும்

வடிந்து முடிந்துவிட்ட நிலையில் புத்தனாக

அலுவலகம் செல்கிறேன் -அவள் இறங்கும் நிறுத்தத்தில்

நின்று புகைக்கிறேன் -இன்றாவது வருவாளா ,சிரிப்பாளா ?

புத்தன் மனிதன் ஆனான் .

என்னை கடக்கையில் நின்றால் ,சிரித்தால் ,நடந்தால் -இது

அது தான் என குதித்தது குரங்கு மனது .

காலில் மெட்டி ,நடு வகிட்டில் பொட்டு ,புது தாலி .

விடுப்பின் காரணம் புரிந்ததில் புகை அணைத்து

அலுவலகம் செல்கிறேன் -மீண்டும் புத்தனாக .

ஆம் ,புத்தனும் மணம் செய்து தானே ஆசை துறந்தான் .

1 comment: