Monday, June 8, 2009

கல்லறைக்காவலன் .

மரணித்த என் பிள்ளைகள்
பிறந்தளுத்த ஆத்மாக்கள் -
தொட முடியா உளுத்தர்கள்
தாங்க முடியா மனிதத்தின் இம்சையில்
விடுதலை பெற்று கொண்டவர்கள்

மௌனித்த இம்சையில் மௌன பாஷை
கூறி விடுப்பு எடுத்தவர்கள் - விழித்தவுடன் அழும்
குழந்தைகளை போல் மரணித்ததும் சிரித்தவர்கள் -
துறவறம் பூண்ட புத்தனின் மனைவி போல் சகலமும் துறந்தவர்கள்.

சஞ்சரித்த சந்தோஷித்த உலகத்திற்கு விடை கொடுத்தவர்கள்
மீளா உறக்கம் உறங்க என்னிடம் இடம் கேட்க்கும்
முடிவிளிகளின் கடைசி உறவினன் ,
கல்லறைக்காவலன் .

No comments:

Post a Comment