Monday, June 29, 2009

தேடல்....

சொந்தங்களின் நசநசப்பில் இருந்து விடை பெற்று
முதலிரவு அறைக்குள் நீ நுழைந்து
என் கண் நோக்கி ஏதோ தேடினாய் - என்னவென்று கேட்டதில்
ஒண்ணுமில்லை என்று சினுங்கிகொண்டாய்.....

எல்லாம் முடிந்து விலகி படுத்து தேடியது
என்னவாக இருக்கும் என்று நான் யோசிக்கையில்
"உண்மை" என்று பதிலளித்தது உள்மனது.....
உண்மையாகவே அதைத்தான் தேடினாளா/தேடினானா?....

எல்லா இரவுகளிலும் சில உண்மைகளின்
தேடல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
விடைகள் தான் கிடைப்பதில்லை.....

No comments:

Post a Comment